எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 8 ஜூன், 2022

முருங்கைக்கீரை அடை

முருங்கைக்கீரை அடை

 


தேவையானவை:- பச்சரிசி – ½ கப்புழுங்கல் அரிசி- ½ கப்துவரம் பருப்புஉளுந்தம்பருப்புபாசிப்பருப்புகடலைப்பருப்பு – தலா ஒரு கைப்பிடி., முருங்கைக் கீரை – 1 கப் உதிர்த்தது, பெரிய வெங்காயம் – 1 பொடியாக அரியவும்தேங்காய் துருவல் – 1 டேபிள் ஸ்பூன்மஞ்சள் தூள் – 1 சிட்டிகை., வரமிளகாய் – 4, சோம்பு – ½ டீஸ்பூன் (அல்லது ) பெருங்காயம் – 1 துண்டுஉப்பு – ½ டீஸ்பூன்எண்ணெய் – 20 மிலி.

 

செய்முறை:-

பச்சரிசி புழுங்கல் அரிசியை உளுந்தம் பருப்பைக் கழுவி ஒன்றாக ஊறவைக்கவும்துவரம்பருப்புபாசிப்பருப்புகடலைப்பருப்பைக் கழுவி ஒன்றாக ஊறவைக்கவும். இரண்டு மணி நேரம் ஊறியபின் மிக்ஸியில் முதலில் மிளகாய் சோம்பு உப்புப் போட்டு அரைத்து அதில் அரிசி உளுந்தைப் போட்டுக் கொரகொரப்பாக அரைக்கவும்அடுத்து பருப்பு வகைகளையும் பெருபெருவென்று அரைத்து எடுக்கவும்முருங்கைக்கீரை, உப்பு, மஞ்சள் பொடிதேங்காய் துருவல்பொடியாக அரிந்த வெங்காயம் போட்டு நன்கு கலக்கி ஐந்து நிமிடம் வைக்கவும்அதன் பின் தோசைக்கல்லில் அடைகளாக ஊற்றி தக்காளிச் சட்னியுடன் பரிமாறவும்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...