எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 26 ஜூன், 2022

புதினா புலவ்

புதினா புலவ்

 


தேவையானவை :- பாசுமதி அரிசி - 1 கப்பெரிய வெங்காயம் - 1 பொடியாக அரிந்தது., தக்காளி - 1 பொடியாக அரிந்ததுஅரைக்க:- புதினா - 1 கட்டுகொத்துமல்லி - 1 கைப்பிடிபச்சை மிளகாய் - 1 அல்லது 2, தேங்காய் - 3 இன்ச் துண்டுஇஞ்சி - 1 இன்ச் துண்டுபூண்டு - 4 பல்சோம்பு - 1 டீஸ்பூன்சீரகம் - 1/2 டீஸ்பூன்மிளகு – 10, தாளிக்க :- எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்பட்டை - 1 இன்ச் துண்டுகிராம்பு – 2, ஏலக்காய் – 1, இலை - 1 இன்ச் துண்டுஅன்னாசிப் பூ - 1



 

செய்முறை :- புதினா., கொத்துமல்லியை கழுவி ., சுத்தம் செய்து மற்ற பொருட்களுடன் போட்டு நன்கு அரைத்து இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி அந்த தண்ணீரை மட்டும் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்அரிசியை நன்கு களையவும்ஒரு பானில் எண்ணெயைக் காயவைத்து பட்டை ., கிராம்பு., ஏலக்காய்., இலை., அன்னாசிப்பூ எல்லாம் தாளிக்கவும்அதில் வெங்காயம்., தக்காளி சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்அரிசியை சேர்க்கவும்உப்பு சேர்த்து அரைத்த தண்ணீரை சேர்க்கவும்நன்கு கிளறி ஒன்று அல்லது இரண்டு விசில் வைத்து குக்கரை இறக்கவும்பத்து நிமிடம் கழித்து குக்கரைத் திறந்து சூடாக புதினா புலவை வெள்ளரி காரட் சாலட்., பைன் ஆப்பிள் ரெய்த்தா., அவித்த முட்டை., உருளைக்கிழங்கு சிப்ஸுடன் பரிமாறவும்..

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...