குழாய்ப் புட்டு
தேவையானவை :-, பச்சரிசி – 2 கப், தேங்காய் – 1, உப்பு – 1 சிட்டிகை., குழாய்ப் புட்டு செய்ய குழாய்ப் புட்டுக்குழல் பாத்திரமும் மாவு சலிக்க சல்லடையும் வேண்டும்.
செய்முறை :- பச்சரிசியக் களைந்து ஒரு மணி நேரம் ஊறவிடவும். ஊறியதும் நீரை வடித்துவிட்டு மிக்ஸியில் அரைத்து நைஸ் சல்லடையில் சலிக்கவும். மாவில் உப்புக் கலந்து பிசறி வைக்கவும்.
தேங்காயை உடைத்துத் தோல் வராமல் மென்மையாகத் துருவவும். குழாய்ப் புட்டுப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து நீர் ஊற்றவும். அதன் குழல் போன்ற பகுதியில் அச்சைப் போட்டு முதலில் கொஞ்சம் மாவு பின் தேங்காய்த் துருவல் போடவும். இதே போல் மூன்று லேயர் போட்டு பாத்திரத்தில் ஃபிட் செய்து அடுப்பில் வைத்து வேகவுடவும். பத்து நிமிடங்களில் வெந்ததும் இறக்கி ஏலப் பொடியுடன் சீனி சேர்த்துப் பரிமாறவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக