கொழுக்கட்டை
தேவையானவை :- இட்லி அரிசி - 2 கப், துருவிய தேங்காய் - 1 கப், பொடியாக அரிந்த வெங்காயம் - 1/2 கப், வரமிளகாய் - 4 விதை நீக்கி சின்னதாக வெட்டவும்., கருவேப்பிலை - 1 இணுக்கு, உப்பு - 1 டீஸ்பூன், உளுந்து - 1 டீஸ்பூன், ஜீரகம் - 1/2 டீஸ்பூன்., எண்ணெய் - 3 டீஸ்பூன்.
செய்முறை :- இட்லி அரிசியைக் கழுவி 2 மணி நேரம் ஊறவைக்கவும். கொரகொரப்பாக அரைக்கவும். பானில் எண்ணெயைக் காயவைத்து உளுந்து., சீரகம்., வரமிளகாய்., கருவேப்பிலை போடவும். வெங்காயம் போட்டு நன்கு வதக்கி மாவை ஊற்றவும். உப்பு சேர்க்கவும். 5 நிமிடம் நன்கு கிளறி கையில் ஒட்டாமல் வரும்போது தேங்காய்த்துருவல் சேர்க்கவும். அடுப்பை அணைத்து மாவை கையால் நன்கு பிசைந்து எலுமிச்சை உருண்டைகளாகவும் பிடி கொழுக்கட்டைகளாகவும் பிடித்து ஆவியில் 20 நிமிடம் வேகவிடவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக