எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
CHOLE SUNDAL லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
CHOLE SUNDAL லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 5 அக்டோபர், 2016

சோளே சுண்டல். CHOLE SUNDAL

2.சோளே சுண்டல் :-

தேவையானவை:- பச்சைக் கொண்டைக்கடலை – 1 கப், வரமிளகாய் – 1, பச்சை மிளகாய் – 1, சீரகம் – 1 தேக்கரண்டி, தேங்காய்த்துருவல் – 1 டேபிள் ஸ்பூன், கொத்துமல்லித்தழை – ஒரு கைப்பிடி, உப்பு- அரை டீஸ்பூன்.எண்ணெய் – ஒரு டீஸ்பூன், கடுகு- அரை டீஸ்பூன், உளுந்து – அரை டீஸ்பூன். 

செய்முறை:- பச்சைக் கொண்டைக்கடலையை குக்கரில் போட்டு கால் தண்ணீர் தெளித்து ஒரு விசில் வரும்வரை வேகவைத்து இறக்கவும். மிக்ஸியில் வரமிளகாய், பச்சை மிளகாய், சீரகம் தேங்காய்த்துருவல்,உப்புப் போட்டு சுற்றவும். கொத்துமல்லித்தழையைப் பொடியாக அரியவும். எண்ணெயைக் காயவைத்து கடுகு உளுந்து தாளித்து அரைத்த கலவையைப் போட்டுக்கிளறி வேகவைத்த சோளேயைச் சேர்க்கவும். கொத்துமல்லி தூவி இறக்கி நிவேதிக்கவும். 

டிஸ்கி:-இந்த ரெசிப்பி 6.10.2016 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானது. 

Related Posts Plugin for WordPress, Blogger...