எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 3 அக்டோபர், 2018

சௌ சௌ பால் கூட்டு.

சௌ சௌ பால் கூட்டு :-

தேவையானவை :- சௌ சௌ  ( மேரக்காய் /பெங்களூர் கத்திரிக்காய் ) - 1. பாசிப்பருப்பு - 1 கைப்பிடி, சீரகம் - அரை டீஸ்பூன், உளுந்து - அரை டீஸ்பூன், பச்சைமிளகாய் - 1, சின்ன வெங்காயம் - 4, உப்பு - கால் டீஸ்பூன், எண்ணெய் - அரை டீஸ்பூன், கருவேப்பிலை., சீனி - 1 சிட்டிகை, பால் - ஒரு டேபிள் ஸ்பூன்.

செய்முறை :- சௌ சௌவைத் தோல் சீவி சின்ன சதுரங்களாக நறுக்கவும். சின்ன வெங்காயத்தையும் தோலுரித்து சதுரமாக நறுக்கவும். பச்சைமிளகாயை வகிர்ந்து கொள்ளவும். ஒரு ப்ரஷர் பானில் பாசிப்பருப்பைப் போட்டு அரை கப் தண்ணீர் ஊற்றவும். அதில் கால் டீஸ்பூன் சீரகம், வகிர்ந்த பச்சை மிளகாய், வெங்காயம், சௌ சௌவைப் போட்டு ஒரு விசில் வைத்து இறக்கவும். உப்பு சேர்த்துக் கலக்கி அதில் உளுந்து, சீரகம் கருவேப்பிலை தாளித்துப் போடவும். இதில் சீனியையும் பாலையும் கலந்து நன்கு கலக்கி சூடான சாதத்தில் நெய் போட்டுப் பரிமாறவும். அல்லது வத்தக்குழம்பு சாதத்துக்கும் தொட்டுக் கொள்ளலாம்.
  

1 கருத்து:


  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...