எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 9 அக்டோபர், 2018

காராமணி (தட்டைப்பயிறு ) மசாலா .

காராமணி (தட்டைப்பயிறு ) மசாலா .

தேவையானவை :- காராமணி - 1 கப், பெரிய வெங்காயம் - 1, தக்காளி - 1. இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன், மஞ்சள்தூள் - 1 சிட்டிகை, மிளகாய்த்தூள், மல்லித்தூள் - தலா முக்கால் டீஸ்பூன், கொத்துமல்லித் தழை, சிறிது, உப்பு - அரை டீஸ்பூன், சீரகம்- அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன்.

தேவையானவை :- காராமணியை லேசாக வறுத்து குக்கரில் நாலைந்து விசில் வரும்வரை வேகவிடவும். பெரியவெங்காயம் தக்காளியைத் தனித்தனியாக அரைத்துக் கொள்ளவும். பானில் எண்ணெயைக் காயவைத்து சீரகம் தாளித்து அரைத்த பெரியவெங்காயம் போட்டு வதக்கவும். அதிலேயே இஞ்சி பூண்டு விழுதை நன்கு வதக்கி வாசம் வந்ததும் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து திறக்கி அரைத்த தக்காளியை ஊற்றவும். எல்லாம் சேர்ந்து எண்ணெய் பிரியும்போது வேகவைத்த காராமணியைப் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றவும். நன்கு கொதித்து சேர்ந்து வந்ததும் கொத்துமல்லித்தழை தூவி இறக்கவும். இதை சப்பாத்தி, நான், ருமாலி ரொட்டி பராத்தாவுடன் தொட்டுக் கொள்ளலாம்.


  

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...