எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 25 ஜூலை, 2021

11.சார்மினார் பிரியாணி

11.சார்மினார் பிரியாணி


தேவையானவை :- மட்டன் – அரைகிலோ, பாசுமதி அரிசி அரை கிலோ, பெரிய வெங்காயம் -2, தக்காளி -2 பிரிஞ்சி இலை, அன்னாசிப்பூ – 1 பட்டை, கிராம்பு, ஏலக்கா – தலா 3, மிளகு, சீரகம் – தலா 1 டீஸ்பூன், உப்பு – 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள், மல்லித்தூள் – தலா 2 டீஸ்பூன், கரம் மசாலா, மஞ்சள்தூள் – தலா அரை டீஸ்பூன், தயிர் – 1 கப், இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன், பச்சைமிளகாய் – 2, பால் – கால் கப், குங்குமப்பூ – சிறிது, எலுமிச்சை சாறு – 2 டேபிள் ஸ்பூன்.  லேயரிங் செய்ய:- வறுத்த வெங்காயம், வறுத்த பூண்டு – 1 டேபிள் ஸ்பூன், குங்குமப்பூ ஊறவைத்த பால் – 2 டேபிள் ஸ்பூன், பொடியாக அரிந்த கொத்துமல்லி – சிறிது, நெய் – 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:- பட்டை கிராம்பு, ஏலக்காய் தலா இரண்டுடன் மிளகு, சீரகம் ஆகியவற்றைப் பொடிக்கவும். ஒரு பௌலில் மட்டனுடன் இந்த மசாலாப் பொடியையும் மிளகாய், மல்லி, கரம் மசாலா, மஞ்சள்தூளும்  போட்டு தயிரும் ஊற்றி 3 நன்கு கிளறி 3 மணி நேரம் ஃப்ரிஜ்ஜில் ஊறவைக்கவும். பாசுமதி அரிசியைக் களைந்து பத்து நிமிடம் ஊறவைத்து அதன்பின் நீரில் உப்பு, நெய், கொத்துமல்லி புதினா சேர்த்து அரைவேக்காடாக வேகவிட்டு வடிக்கவும். சிறிது நெய்யில் வடித்த சாதத்தைக் கிளறி வைக்கவும். வெங்காயத்தை ஒரு கடாயில் எண்ணெய் நெய் ஊற்றிப் பொன்னிறமாக வதக்கவும் இத்துடன் மீதி பட்டை கிராம்பு ஏலக்காய், பிரிஞ்சி இலை, அன்னாசிப்பூ சேர்க்கவும். தக்காளியைச் சேர்த்து நன்கு வதக்கி பாலைச் சேர்க்கவும். இத்துடன் ஊறவைத்த மட்டனைப் போட்டு நன்கு கிளறி தீயைக் குறைத்து 10 நிமிடம் மூடி போட்டு வேகவிடவும். மட்டன் முழுவதுமாக வெந்ததும் இறக்கவும். இன்னொரு தேக்ஸாவில் நெய் சாதம், வெங்காயம் பூண்டு கொத்துமல்லிக் கலவை, வெந்த மட்டன், குங்குமப்பூ ஊறவைத்த பால், நெய் என மாற்றி மாற்றி லேயர் லேயராக அடுக்கி  மூடி போட்டு 10 நிமிடம் தம்மில் வைத்து இறக்கவும். ஆனியன் ரெய்த்தா, கத்திரிக்காய் புளிக்கறி, தாழ்ச்சாவுடன் பரிமாறவும்.

 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...