எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 1 ஜூலை, 2021

4.தினை காளான் பிரியாணி

4.தினை காளான் பிரியாணி


தேவையானவை:- தினை – 2 கப், சிப்பிக் காளான் – 1 பாக்கெட், பெரிய வெங்காயம் – 2, இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன், பச்சைமிளகாய் – 4, தக்காளி – 2, மஞ்சள்தூள் – 1 சிட்டிகை, மிளகாய், மல்லித்தூள் – அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் – 4, தேங்காய் திருகியது – 2 டீஸ்பூன், சோம்பு, சீரகம், மிளகு – தலா அரை டீஸ்பூன், உப்பு – 1 டீஸ்பூன், பட்டை, கிராம்பு, ஏலக்காய் – தலா -2, கொத்துமல்லி, புதினாத்தழை – 2 டீஸ்பூன், எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் .

செய்முறை:- காளானை சுத்தம் செய்து இரண்டாக வெட்டி வெந்நீரில் போட்டு எடுக்கவும். தினையைக் கழுவி ஊறவைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காயைத் தாளிக்கவும். நீளமாக அரிந்த வெங்காயத்தைப் போட்டுப் பொன்னிறமாக வதக்கவும். இஞ்சி பூண்டு சேர்த்து ப்ரவுனாக ஆனதும் மிளகாய்த்தூள் மல்லித்தூள், உப்பு, மஞ்சள் பொடி காளான் சேர்த்து நன்கு திறக்கவும். எண்ணெய் பிரியும்போது தினை, தக்காளி, கொத்துமல்லி, கருவேப்பிலை போடவும். தேங்காய், சோம்பு சீரகம் மிளகை நன்கு அரைத்து நான்கு கப் தண்ணீரில் கரைத்து தினையில் ஊற்றவும். நன்கு கலக்கிவிட்டு குக்கரை மூடி ஒரு விசில் வைத்து இறக்கவும் ஆறியதும் திறந்து பைனாப்பிள் தயிர்ப்பச்சடியோடு பரிமாறவும்.

 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...