எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 11 ஜூலை, 2021

7.முந்திரி பிரியாணி

7.முந்திரி பிரியாணி


தேவையானவை:- முந்திரி – 100 கி , கிஸ்மிஸ் – ஒரு டேபிள் ஸ்பூன், பாசுமதி அரிசி – 2 கப், தேங்காய்ப்பால் – 4 கப், பெரிய வெங்காயம் – 1, இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன், புதினா மல்லித்தழை – ஒரு டீஸ்பூன், பச்சைமிளகாய் – 2, நெய் – 1 டேபிள்ஸ்பூன், குங்குமப்பூ – 2 சிட்டிகை, பட்டை, கிராம்பு, ஏலக்காய் – தலா 2, உப்பு – ஒரு டீஸ்பூன், சீனி – கால் டீஸ்பூன்.

செய்முறை:- பாசுமதி அரிசியைக் களைந்து நீரை இறுத்து வைக்கவும். பானில் நெய்யைக் காயவைத்து பட்டை கிராம்பு ஏலக்காய் தாளித்து முந்திரி கிஸ்மிஸைப் போடவும். முந்திரி லேசாக வதங்கியதும் ( சிவக்க வேண்டாம்) பெரிய வெங்காயத்தைப் போட்டு வதக்கி இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய், புதினா கொத்துமல்லித்தழை, உப்பு சேர்க்கவும். லேசாக நெய் பிரிந்ததும் அரிசியைச் சேர்த்து வறுத்துக் குங்குமப்பூவைப் போட்டுத் தேங்காய்ப்பாலை ஊற்றவும். சிம்மில் மூடி போட்டுக் கிளறி கடைசியாக தம்மில் வைத்து இறக்கவும். ரோஹன் ஜோஷ், சிக்கன் குருமாவுடன் பரிமாறவும்.

 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...