எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 29 ஜூலை, 2021

12.பெங்களூரு தொன்னை பிரியாணி

12.பெங்களூரு தொன்னை பிரியாணி


தேவையானவை :- சிக்கன் - அரை கிலோசீரக சம்பா அரிசி - 2 கப்பெரிய வெங்காயம் - 2,  தக்காளி 2,  தயிர் - 1 கப்மல்லித்தூள் - 1 டீஸ்பூன்பிரியாணி மசாலா தூள் - அரை டீஸ்பூன்மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்கசூரி மேத்தி - கால் டீஸ்பூன்உப்பு 2 டீஸ்பூன்எலுமிச்சை 1 மூடிதண்ணீர் 4 கப்எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்நெய் - 1 டேபிள் ஸ்பூன்பட்டை , கிராம்பு தலா 2. அரைக்க:- பெரிய வெங்காயம் 2, புதினாகொத்துமல்லி தலா ஒரு கைப்பிடிபச்சை மிளகாய் - 6, பூண்டு - 20 பல்இஞ்சி 2 இஞ்ச் துண்டுமிளகு 1 டீஸ்பூன்பட்டைஏலக்காய்கிராம்பு தலா 2, உப்பு கால் டீஸ்பூன்

 

செய்முறை :- அரிசியைக் களைந்து ஊறவைக்கவும்அரைக்கக் கொடுத்துள்ளவற்றை மைய அரைக்கவும்குக்கரில் எண்ணெய்நெய் சேர்த்து பட்டை கிராம்பு தாளிக்கவும்இதில் நீளமாக அரிந்த வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கவும்அதில் மட்டனைப் போட்டு நன்கு வதக்கித்  தக்காளியை அரைத்து ஊற்றவும்இத்துடன் மல்லித்தூள்மஞ்சள்தூள் பிரியாணி மசாலாத்தூள் &  அரைத்த மசாலாவையும் சேர்த்து நன்கு திறக்கிவிட்டு கசூரி மேத்தி போட்டு தயிர் சேர்த்து எண்ணெய் பிரியும்வரை வதக்கவும்ஒரு கப் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வரும்வரை வேக விடவும்வெந்ததும் திறந்து இன்னும் 3 கப் நீரூற்றி அரிசியைச் சேர்த்துக் கிளறவும்அரிசி முக்கால் பதம் வெந்ததும் மூடியைப் போட்டுக் குறைந்த தணலில் பத்து நிமிடம் வைத்து இறக்கவும்பனை ஓலையில் செய்யப்பட்ட பெரிய தொன்னையில் வைத்து ரெய்த்தாவுடன் பரிமாறவும்

 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...