எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 6 அக்டோபர், 2021

1.தென்னம்பாளைப் பொடிமாஸ்

1.தென்னம்பாளைப் பொடிமாஸ்

 


தேவையானவை :- தென்னம்பாளை – 1/4 பாகம் , காராமணிஅரை கப், கடலைப்பருப்புஅரை கப், வரமிளகாய் – 10, சோம்பு – 1 டீஸ்பூன், சீரகம்அரை டீஸ்பூன், தேங்காய்த்துருவல் – 1 டேபிள்ஸ்பூன் , பெரிய வெங்காயம்2, உப்புஒரு டீஸ்பூன்,   தாளிக்க :- எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் , கடுகு ,உளுந்துதலா 1 ஸ்பூன், கருவேப்பிலை – 1 இணுக்கு.


 

செய்முறை :- தென்னம்பாளையை சுத்தம் செய்து உதிர்த்துக் கொள்ளவும். காராமணி, கடலைப்பருப்பைத் தனித்தனியாகக் களைந்து ஊறவைக்கவும். வரமிளகாய் சோம்பு சீரகத்தை உப்பு சேர்த்து அரைக்கவும். தென்னம்பாளையை லேசாக அரைத்து தண்ணீரில் கரைத்துப் பிழிந்து வைத்துக் கொள்ளவும். ,இத்துடன் காராமணி கடலைப்பருப்பை அரைத்து இட்லிப் பாத்திரத்தில் இட்லிகளாக ஊற்றி வேகவைத்து உதிர்க்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றிக் கடுகு உளுந்து தாளித்து வெங்காயம் கருவேப்பிலையை வதக்கவும். அரைத்த மிளகாய் சோம்பு மசாலா போட்டு பச்சை வாசனைபோனதும் இட்லிகளாக ஊற்றி வேகவைத்து உதிர்த்த தென்னம்பாளைப் பொடிமாஸைப் போட்டு வதக்கவும். நன்கு வதக்கி உப்பு சேர்த்து தேங்காய்த் துருவல் போட்டுக் கலந்து இறக்கவும்.

 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...