எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 25 அக்டோபர், 2021

7.குங்குமப்பூ கல்கண்டு சாதம்

7.குங்குமப்பூ கல்கண்டு சாதம்

 


தேவையானவை :- பாசுமதி அரிசி – 1 கப், குங்குமப்பூ – 2 கி, பால் – 2 கப், கல்கண்டு – 1 டேபிள்  ஸ்பூன்உப்பு – 1 சிட்டிகை, நெய் – 1 டேபிள் ஸ்பூன், முந்திரி – 6, பாதாம் – 6, கிஸ்மிஸ் – 6, பட்டை  இலை – 1 சிறுதுண்டு, ஏலக்காய் – 3, கிராம்பு – 1, ஆப்பிள் – ½ இன்ச் துண்டுகள் = 6 பைனாப்பிள் – ½ இன்ச் துண்டுகள் = 6.

 


செய்முறை:- பாதாம் முந்திரியை ஊறவைத்து நான்காக நறுக்கிக் கொள்ளவும். பாசுமதி அரிசியைக் களைந்து 10 நிமிடம் ஊறவைக்கவும். தண்ணீரை வடித்துவிட்டு பால் ஊற்றிக் குக்கரில் வேகப் போடவும். ஒரு டேபிள் ஸ்பூன் பாலை சூடுபடுத்திக் குங்குமப்பூவைப் போட்டு வைக்கவும். பாசுமதி அரிசி வெந்ததும் உதிர்த்துக்கொள்ளவும். பானில் நெய்யைக் காயவைத்துப் பட்டை இலை, ஏலக்காய், கிராம்பு தாளிக்கவும். அதில் முந்திரி பாதாமைப் போட்டு வதக்கி கிஸ்மிஸ், ஆப்பிள், பைனாப்பிளை சேர்க்கவும். உப்பையும் பொடித்த கல்கண்டையும் சேர்த்து பாலில் கரைத்த குங்குமப்பூவை ஊற்றவும். வேகவைத்த பாசுமதி சாதத்தையும் போட்டு நன்கு கலந்து சிறிது நேரம் வைத்திருந்து உபயோகப் படுத்தவும்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...