எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 12 அக்டோபர், 2018

பாகற்காய் மசாலா.

பாகற்காய் மசாலா :-

தேவையானவை :- பாகற்காய் - 250 கி, பெரிய வெங்காயம் - 1, தக்காளி 1, பூண்டு - 4, புளி - 2 சுளை, உப்பு - அரை டீஸ்பூன், சாம்பார் தூள் - 1 டீஸ்பூன், மஞ்சள்தூள் - 1 சிட்டிகை, எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு, உளுந்து சோம்பு - தலா அரை டீஸ்பூன், கருவேப்பிலை - 1 இணுக்கு, வெல்லம் - வேர்க்கடலை அளவு துண்டு.

செய்முறை :- பாகற்காய்களை நான்காகக் கீறி அதில் விதை நீக்கி கட்டம் கட்டமாக நறுக்கவும். பெரியவெங்காயம் தக்காளி பூண்டை சுத்தம் செய்து துண்டுகள் செய்யவும். புளியைக் கரைத்து சாம்பார்தூள், உப்பு, மஞ்சள் தூள் போட்டு வைக்கவும். எண்ணெயைக் காயவைத்துக் கடுகு உளுந்து சோம்பு தாளித்து பாகற்காயை வதக்கவும் இரு நிமிடங்கள் வதக்கியபின்பு பெரிய வெங்காயம் பூண்டு தக்காளி போட்டு வதக்கவும். இரு நிமிடங்கள் கழித்து புளிக்கரைசலை ஊற்றி மூடி போட்டு வேகவிடவும். சுண்டி வரும்போது வெல்லதைப் போட்டு நன்கு கிளறி இறக்கவும். இது தயிர்சாதத்துடன் சாப்பிட பெஸ்ட் காம்பினேஷன்.
  

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...