எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 22 அக்டோபர், 2018

சௌசௌ கடலைப்பருப்புக் காரக்கூட்டு. :-

சௌசௌ கடலைப்பருப்புக் காரக்கூட்டு. :-

தேவையானவை :- சௌ சௌ – 1, கடலைப்பருப்பு – கால் உழக்கு, பெரிய வெங்காயம் – பாதி, சாம்பார் பொடி – அரை டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன், தாளிக்க :- எண்ணெய் – ஒரு டீஸ்பூன், உளுந்து சீரகம் – தலா அரை டீஸ்பூன், வரமிளகாய் – 1, கருவேப்பிலை – 1 இணுக்கு.


செய்முறை :- சௌ சௌவைத் தோல் சீவி கட்டம் கட்டமாக வெட்டவும். பெரிய வெங்காயத்தையும் நைஸாக வெட்டவும்.  குக்கரில் கடலைப்பருப்பைப் போட்டு அரை கப் தண்ணீர் ஊற்றி அதில் சௌ சௌ, பெரிய வெங்காயம், சாம்பார் பொடி போட்டு ஒரு விசில் வைத்து  இறக்கவும். உப்பைப் போட்டுக் கலக்கவும். எண்ணெயைக் காயவைத்து உளுந்து சீரகம் இரண்டாகக் கிள்ளிய வரமிளகாய்,கருவேப்பிலை தாளித்துக் கொட்டி ஒரு கொதி வந்ததும் இறக்கவும். 
  

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...