எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 20 பிப்ரவரி, 2021

கத்திரி வத்தல், அவரை வத்தல், மாவத்தல் குழம்பு.

கத்திரி வத்தல், அவரை வத்தல், மாவத்தல் குழம்பு. 


தேவையானவை :- கத்திரிவத்தல், அவரை வத்தல் - தலா 10, மாவத்தல் - 5, சின்ன வெங்காயம் - 8, பூண்டு- 4 பல், தக்காளி - 1, சாம்பார் பொடி - 1 டேபிள் ஸ்பூன், மஞ்சள்தூள் - 1 சிட்டிகை, பெருங்காயம் - 1 துண்டு. வேகவைத்த துவரம் பருப்பு - ஒரு டேபிள் ஸ்பூன், புளி - 1 நெல்லி அளவு, உப்பு - அரை டீஸ்பூன், எண்ணெய் - 1 டீஸ்பூன், கடுகு உளுந்து சீரகம் - தலா அரை டீஸ்பூன். 

செய்முறை:- கத்திரி வத்தல் அவரை வத்தல் மாவத்தலைக் கழுவி ஊறவைக்கவும். வேகவைத்த துவரம் பருப்புடன்  வற்றல்கள், பெருங்காயம், மஞ்சள்தூள், பூண்டு, வெங்காயம், தக்காளியைப் போட்டுக் குக்கரில் ஒரு விசில் வைக்கவும். வெந்ததும் லேசாக மசித்து விட்டு சாம்பார்பொடியைப் போடவும். புளியை அரைக் கப் தண்ணீரில் கரைத்து உப்புடன் குழம்பில் ஊற்றிக் கொதிக்க விடவும். எண்ணெயில் கடுகு, உளுந்து சீரகம் தாளித்து உபயோகிக்கவும். 


 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...