எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 26 பிப்ரவரி, 2021

கோங்குரா துவையல்/சட்னி

கோங்குரா  துவையல்/சட்னி


தேவையானவை:- புளிச்சகீரை - 1 கட்டு, வரமிளகாய் - 10, பெரிய வெங்காயம் - 1, புளி - ஒரு நெல்லி அளவு, உப்பு - அரை டீஸ்பூன், வரமல்லி - 1 டேபிள் ஸ்பூன், வெந்தயம் - கால் டீஸ்பூன். எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன்.

செய்முறை:- வெறும் வாணலியில் வரமிளகாய், வரமல்லி, வெந்தயத்தைத் தனித்தனியாக வறுத்து எடுக்கவும். பெரிய வெங்காயத்தை நறுக்கி சிறிது எண்ணெயில் உப்புப் புளியோடு வதக்கவும். வெங்காயத்தை எடுத்தபின் அதே வாணலியில் சுத்தம் செய்து ஆய்ந்து கழுவிய புளிச்சகீரையை நன்கு பிரட்டி வதக்கவும். எல்லாவற்றையும் ஆறவைத்து மிக்ஸியில் முதலில் மிளகாய், வரமல்லி வெந்தயத்தைப் பொடித்து அதன் பின் வெங்காயம் கீரையைப் போட்டுக் கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும். இதை ஒரு பௌலில் வழித்து எடுத்து வைக்கவும். அதன் மேல் எண்ணெயைக் காய்ச்சிக் கடுகு போட்டுப் பொரிந்ததும் ஊற்றவும். சுவையான கோங்குரா சட்னி தயார். இதை இட்லி தோசை, சாதத்தோடு பரிமாறவும். 
 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...