எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 12 செப்டம்பர், 2021

25.தெஹ்ரி(உருளை) பிரியாணி

25.தெஹ்ரி(உருளை) பிரியாணி


தேவையானவை:- பாசுமதி அரிசி – 1 கப், உருளைக்கிழங்கு – 2, கேரட் – 1, பட்டாணி – ஒரு கைப்பிடி, பெரிய வெங்காயம் – 1, சீரகம் – 1 டீஸ்பூன், எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், பிரிஞ்சி இலை – 1, மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன், மல்லித்தூள் – அரை டீஸ்பூன், கரம் மசாலா – அரை டீஸ்பூன், வெண்ணெய் – 1 டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன்.

செய்முறை:- அரிசியைக் குளிர்ந்த நீரில் அலசி 20 நிமிடம் ஊறவைக்கவும். குக்கரில் எண்ணெயைக் காயவைத்து சீரகம், பிரிஞ்சி இலை, வெங்காயத்தைத் தாளிக்கவும். வெங்காயம் மென்மையாக ஆனதும் நீளமாக அரிந்த உருளை, கேரட்டைச் சேர்க்கவும். இவை சிவந்து வெந்தது மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூளைச் சேர்த்துக் கிளறவும். அரிசியை வடித்துப் போட்டு இதில் வறுக்கவும். 2 கப் தண்ணீர் ஊற்றி வெண்ணெயையும் பட்டாணியையும் கரம் மசாலாவையும் சேர்க்கவும். உப்பைச் சேர்த்து நன்கு வதக்கி ஒரு விசில் வைத்து இறக்கவும். பனீர் க்ரேவி, பட்டாணி குருமாவுடன் பரிமாறவும்.

 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...