எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 19 அக்டோபர், 2022

துவரம்பருப்பு சட்னி:-

துவரம்பருப்பு சட்னி:-



தேவையானவை:- வரமிளகாய் – 3, துவரம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன், பச்சரிசி - 2 டீஸ்பூன், வெந்தயம் - 1/2 டீஸ்பூன், பெருங்காயம் - 1/10இஞ்ச் துண்டு, பெரிய வெங்காயம் – 1, தக்காளி – 1, புளி - 1 சுளை, உப்பு - 1 டீஸ்பூன் எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு - 1 டீஸ்பூன், உளுந்து - 1 டீஸ்பூன்,கருவேப்பிலை - 1 இணுக்கு.

செய்முறை :- வெறும் பானில் எண்ணெயில்லாமல் வரமிளகாய்., துவரம்பருப்பு., பச்சரிசி., வெந்தயம்., பெருங்காயம் போட்டு வறுத்து பொடிக்கவும். புளியை 3 கப் தண்ணீரில் கரைத்து எடுத்து உப்பு சேர்க்கவும். வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கவும். பானில் எண்ணெயிக் காய வைத்து கடுகு போட்டு வெடித்ததும்., உளுந்து போட்டு சிவந்ததும்., வெங்காயம் ., தக்காளி., கருவேப்பிலை போட்டு நன்கு வதக்கவும். அதில் புளித்தண்ணீரை ஊற்றவும். உப்பும் மசாலா பொடியும் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். 10 நிமிடம் சிம்மில் வைத்து சூடாக இட்லி., தோசையுடன் பரிமாறவும்..

 

1 கருத்து:


  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...