எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 24 அக்டோபர், 2022

கடலைப்பருப்பு கூட்டு:-

கடலைப்பருப்பு கூட்டு:-


தேவையானவை;- கடலைப்பருப்பு – 1 கப், பெரிய வெங்காயம் – 1, தேங்காய்த்துருவல் -1 டேபிள் ஸ்பூன், சாம்பார் பொடி – அரை டீஸ்பூன், தாளிக்க :- கடுகு, உளுந்து எண்ணெய் – தலா ஒரு டீஸ்பூன், வரமிளகாய் – 1, கருவேப்பிலை – 1 இணுக்கு. உப்பு – கால் டீஸ்பூன். பெருங்காயப் பொடி – 1 சிட்டிகை.

செய்முறை:- கடலைப்பருப்பைக் களைந்து சிறிது நேரம் ஊறவைக்கவும். அரைக் கப் நீரூற்றி குக்கரில் ஒரு விசில் வேகப்போடவும். வெந்ததும் திறந்து பொடியாக அரிந்த வெங்காயம், சாம்பார் பொடி போட்டுக் கொதிக்க விடவும். இரண்டு நிமிடங்கள் கொதித்ததும் உப்பு சேர்க்கவும். எண்ணெயில் கடுகு உளுந்து இரண்டாகக் கிள்ளிய வரமிளகாய், கருவேப்பிலை பெருங்காயப்பொடி தாளித்துக் கொட்டித் தேங்காய்த்துருவல் சேர்த்து இறக்கவும்.

 

1 கருத்து:


  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...