எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 18 ஜனவரி, 2017

குழலப்பம்- KUZHALAPPAM

குழலப்பம்:-

தேவையானவை:- அரிசி மாவு – 1கப், சின்னவெங்காயம் – 3, பூண்டுப் பல் – 1, சீரகம் – அரை டீஸ்பூன், கறுப்பு எள்ளு – 1 டீஸ்பூன், உப்பு – கால் டீஸ்பூன், தண்ணீர் – கால் கப் + 1 டேபிள்ஸ்பூன், எண்ணெய் – பொறிக்கத் தேவையான அளவு. சில்வர் குழல்கள் – 4

செய்முறை:- சீரகம், சின்னவெங்காயம், பூண்டு இவற்றை மிக்ஸியில் போட்டு ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். ஒரு பானில் கால் கப் தண்ணீரை உப்பு சேர்த்துக் கொதிக்கவைத்து இறக்கி வைக்கவும். ஒரு பௌலில் அரிசி மாவு , எள், அரைத்த சீரகக் கலவை போட்டு நன்கு கலந்து கொதிக்க வைத்த நீரை சிறிது சிறிதாகச் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து ஈரத்துணி கொண்டு மூடி பத்து நிமிடம் வைக்கவும். ஒரு பானில் எண்ணெயைக் காயவைக்கவும். ஒரு ப்ளாஸ்டிக் ஷீட்டில் எலுமிச்சை அளவு மாவை எடுத்து வட்டமாகத் தட்டி சில்வர் குழலில் சுற்றி ஒட்டி அதைக் காயும் எண்ணெயில் மெதுவாக விடவும். இதுபோல பானின் சைஸுக்கு ஏற்றவாறு மூன்று நான்கு சில்வர் குழல்களில் மாவை ஒட்டிப் போடலாம். எல்லாப் பக்கமும் திருப்பிவிட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். ஒரு குச்சியால் குழலில் இருந்து எடுத்துப் பரிமாறவும்.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...