எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 19 ஜூலை, 2020

கீமா பராத்தா.

கீமா பராத்தா.

தேவையானவை:- கோதுமை மாவு - 1 கப், மட்டன் கைமா - 150 கி, பெரிய வெங்காயம் - 1, மிளகாய்ப்பொடி - அரை டீஸ்பூன், மல்லித்தூள் - அரை டீஸ்பூன், வெந்த கடலைப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன். தேங்காய்த்துருவல் - 1 டேபிள் ஸ்பூன். உப்பு - அரை டீஸ்பூன், எண்ணெய் - 50 கிராம். தாளிக்க பட்டை கிராம்பு, ஏலக்காய் - தலா 1, சோம்பு - 1 டீஸ்பூன்.

செய்முறை:- குக்கரில் மட்டன் கைமாவை கால் கப் தண்ணீர் விட்டு மூன்று நான்கு விசில் நன்கு வேகவிடவும். ஒரு பானில் இரண்டு ஸ்பூன் எண்ணெயை ஊற்றி பட்டை கிராம்பு, ஏலக்காய், சோம்பு போட்டுத் தாளிக்கவும். அதில் பொடியாக அரிந்த வெங்காயம் போட்டு மிளகாய்த்தூள், மல்லித்தூள் கால் டீஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு வதக்கி வெந்த கைமாவைப் போடவும். நன்கு சுருள வெந்ததும் வெந்த கடலைப் பருப்பு, தேங்காய்த்துருவலைச் சேர்த்து இன்னும் இரு நிமிடங்கள் கிளறி இறக்கவும்.

கோதுமை மாவில் கால் டீஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு பிசைந்து எண்ணெயைச் சேர்த்துப் பிசைந்து பத்துநிமிடம் ஊறவிடவும். பின் சப்பாத்தி போல் உருண்டைகள் செய்து அதில் கைமா மசாலாவை உருட்டி வைத்து மூடி கனமான சப்பாத்திகளாகத் தேய்த்து தோசைக்கல்லில் போட்டு சுற்றிலும் எண்ணெய் விட்டுப் பொன்னிறமாக வெந்ததும் சூடாக எடுத்து அச்சார் ( ஊறுகாய்) தயிர் ஆகியவற்றுடன் பரிமாறவும்.
  

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...