எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 30 ஜூலை, 2020

பஞ்சாபி பனீர் பட்டர் மசாலா.

பஞ்சாபி பனீர் பட்டர் மசாலா. 


தேவையானவை :- பனீர் - 200 கி, பெரிய வெங்காயம் - 1, தக்காளி - 2, இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், மல்லித்தூள் - அரை டீஸ்பூன், கரம் மசாலா - கால் டீஸ்பூன், கசூரி மேத்தி ( காய்ந்த வெந்தயக்கீரை ) - சிறிது, வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன், மலாய் ( பாலாடை ) - 1 டேபிள் ஸ்பூன். எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன், பால் - 1 கப், உப்பு - அரை டீஸ்பூன், பட்டை, இலை - சிறிது. 

செய்முறை:- பனீரைத் துண்டுகளாக்கிக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியைத் தனித்தனியாக அரைக்கவும். ஒரு பானில் பட்டை இலை அரைத்த வெங்காயம் போட்டு வதக்கவும். வெங்காயம் கண்ணாடி போல் வெந்ததும் இஞ்சி பூண்டு பேஸ்டைப் போடவும். அதையும் சிறிது நேரம் வதக்கி சிவந்ததும் மிளகாய்த்தூள் மல்லித்தூள் தக்காளி பேஸ்டை போடவும். உப்பு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கி பனீரைப் போட்டுப் பாலையும் அரை கப் தண்ணீரையும் ஊற்றவும். சிறிது கொதித்ததும் இதில் கசூரி மேத்தி கரம் மசாலா சேர்த்து இன்னும் சில நிமிடம் வேக வைக்கவும். ( தண்ணீர் போதவில்லையென்றால் சிறிது சேர்த்துக் கொள்ளவும். ) இறக்கும்போது மலாயையும் வெண்ணெயையும் போட்டு இறக்கி ரொட்டி, நான், சப்பாத்தி, ருமாலி ரொட்டி, குல்ச்சா, ஜீரா ரைஸுடன் பரிமாறவும். 

  

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...