எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 20 ஜூலை, 2020

கேப்பைப் புட்டு/ராகிப் புட்டு.

கேப்பைப் புட்டு.

தேவையானவை:- கேப்பை ( ராகி ) மாவு -1 கப் ( வீட்டிலேயே கேப்பையை வாங்கி அலசி ஊறவைத்து நீர் வடித்து மிக்ஸியில் திரித்து சலித்துக் கொள்ளலாம். இது இன்னும் சுவையாக இருக்கும். ), உப்பு - 1சிட்டிகை, சீனி  அல்லது வெல்லம் - கால் கப், தேங்காய்த்துருவல் - கால்கப், நெய் - 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:- கேப்பையை ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நீர் தெளித்துப் பிசறிக் கொள்ளவும். கால் கப் தண்ணீர் போதுமானது. ஒன்று சேர்ந்து பிடித்தால் கொழுக்கட்டையாகப் பிடிக்க வரவேண்டும். உதிர்த்தால் உதிரவேண்டும் . இதுவே பக்குவம். ஒரு சல்லடையில் இம்மாவைச் சலித்து இட்லிச் சட்டியில் துணி போட்டு ஆவியில் பத்து நிமிடம் வேகவிடவும். ஒரு பௌலில் சீனி நெய், தேங்காய் போட்டுக் கலந்து வைக்கவும். சூடாகப் புட்டை உதிர்த்துக்கொட்டிக் கலந்து பரிமாறவும். மிகவும் ருசியான & சத்தான புட்டு இது.
  

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...