எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2020

தக்காளிக் குழம்பு.

தக்காளிக் குழம்பு. 


தேவையானவை :- தக்காளி - 4, பெரிய வெங்காயம் - 1, பூண்டு - 8 பல், தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன், வரமிளகாய் - 4, சோம்பு - 1 டீஸ்பூன், கசகசா - அரை டீஸ்பூன், முந்திரிப் பருப்பு - 6 உப்பு - 1 டீஸ்பூன், எண்ணெய்- 1 டேபிள் ஸ்பூன், தாளிக்க பட்டை கிராம்பு - தலா 2. 

செய்முறை:- தக்காளிகளை முழுதாக ஒரு பாத்திரத்தில் போட்டு அவை மூழ்கும் அளவு நீர் ஊற்றி மூடி போட்டு 5 நிமிடம் சூடுபடுத்தவும். அப்படியே இறக்கி வைத்து ஆறியதும் தோலுரித்து வைக்கவும். பெரிய வெங்காயத்தை நீளமாக நறுக்கவும். பூண்டை உரித்து வைக்கவும்.

வரமிளகாய் , சோம்பு, தேங்காயை அரைத்து வைக்கவும். கசகசாவையும் முந்திரிப்பருப்பையும் தனியாக அரைத்து வைக்கவும். தக்காளியைத் தனியாக அரைக்கவும். 

கடாயில் எண்ணெயைக் காயவைத்துப் பட்டை கிராம்பு தாளித்துப் பெரிய வெங்காயம், பூண்டைப் போட்டு வதக்கவும். அதில் உப்புடன் தேங்காய் அரைத்த கலவையைப் போட்டு எண்ணெய் பிரியும்வரை வதக்கவும். அரைத்த தக்காளியைச் சேர்க்கவும். சில நிமிடம் கொதித்தபின் கசகசா முந்திரி அரைத்த கலவையைச் சேர்க்கவும். எல்லாம் நன்கு சேர்த்து கொதித்து  எண்ணெய் பக்கவாட்டில் பிரிய ஆரம்பிக்கும்போது இறக்கவும். சூடாக சோற்றுடன் அல்லது தோசை இட்லி சப்பாத்தியுடன் பரிமாறவும். 

  

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...