எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 29 ஆகஸ்ட், 2020

காராபூந்தி

காராபூந்தி.


தேவையானவை:- கடலைமாவு - 1 கப், அரிசி மாவு - 1 டீஸ்பூன், சோடாப்பூ - 1 சிட்டிகை ( விரும்பினால் ). மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - கால் டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:- ஒரு பேஸினில் கடலைமாவு, அரிசி மாவு, சோடாப்பூ, மிளகாய்த்தூள், உப்பு போட்டு நன்கு கலக்கவும். அரை கப் நீரை சிறிது சிறிதாக ஊற்றி தோசை மாவு பதத்தில் கட்டிகள் இல்லாமல் கரைக்கவும். எண்ணெயைக் காயவைத்து ஒரு குழிக்கரண்டி மாவை முகர்ந்து அரிகரண்டி/பூந்தி தேய்க்கும் கரண்டியில் ஊற்றி அதே குழிக்கரண்டியால் லேசாகத் தேய்த்து முத்துமுத்தாக மாவை எண்ணெயில் விழச்செய்யவும். இன்னொரு அரிகரண்டியால் அவ்வப்போது கிளறிவிட்டுச் சலசலவென வெந்ததும் அரித்து வடிதட்டியில் போடவும். மிளகாய்த்தூளை முன்னே சேர்க்காமல் அனைத்து பூந்தியையும் பொரித்தபின் மொத்தமாகத் தூவிக் குலுக்கியும் வைக்கலாம். இந்த காராபூந்தி தயிர்வடையின் மேல் போட்டுச் சாப்பிட நன்றாக இருக்கும். இதோடு ஓமப்பொடி, பொரி, பொடியாக அரிந்த வெங்காயம், காய்கறிக்கலவை, தக்காளி சாஸ் மிளகுத்தூள் மல்லித்தழை சேர்த்தும் சாப்பிடலாம்.  தயிரில் போட்டு பூந்தி ரெய்தாவாகச் செய்து ( விரும்பினால் சாட் மசாலா தூவி )சப்பாத்தி நான் போன்றவற்றுக்குத் தொட்டுக் கொள்ளவும் செய்யலாம். 

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...