எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 12 ஜூன், 2022

தூதுவளை ரசம்

தூதுவளை ரசம்


 

தேவையானவை :- தூதுவளைக் கீரை - 1 சிறு கட்டுதுவரம் பருப்பு வேகவைத்த தண்ணீர் - 1 கப்தக்காளி – 1, வரமிளகாய் – 2, புளி - 1 நெல்லிக்காய் அளவுஉப்பு - 1 டீஸ்பூன்மிளகு ஜீரகப் பொடி - 1 டீஸ்பூன்மஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூன்மல்லிப் பொடி - 1/4 டீஸ்பூன்வெள்ளைப் பூண்டு - 2 பல் ( விரும்பினால்), எண்ணெய் - 1 டீஸ்பூன்கடுகு - 1 டீஸ்பூன்ஜீரகம் - 1/2 டீஸ்பூன்வெந்தயம் - 1/4 டீஸ்பூன்பெருங்காயம் - 1/8 இஞ்ச் துண்டு

 

 

செய்முறை :-தூதுவளையை சுத்தம் செய்து கழுவி துண்டுகளாய் வெட்டவும்லேசாக கல்லில் போட்டு நைத்து வைக்கவும்புளியை 3 கப் தண்ணீரில் கரைத்து உப்பு சேர்க்கவும்பருப்புத்தண்ணீரையும் சேர்க்கவும்தக்காளியைக் கரைத்து ., பூண்டை நசுக்கிப் போடவும்அதில் மிளகு ஜீரகப் பொடி., மஞ்சள் பொடி., தனியா பொடி போடவும்பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போட்டு வெடித்தவுடன் ., ஜீரகம்., வெந்தயம்., பெருங்காயம் போடவும்இரண்டாகக் கிள்ளிய வரமிளகாய்., தூதுவளைக் கீரையைப் போட்டு ஒரு நிமிடம் வதக்கி கரைத்த புளித்தண்ணீரை ஊற்றவும்நன்கு நுரை கூடி வரும் போது இறக்கி சூடாக சூப் போல அருந்தக் கொடுக்கவும் அல்லது குழைவான சாத்தோடு பரிமாறவும்இது உடல் வலி மற்றும் சளியை குணப்படுத்தும்.

 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...