எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 25 நவம்பர், 2019

24. திருவாதிரை – வெந்தயக் களி

24. திருவாதிரை – வெந்தயக் களி

தேவையானவை :- புழுங்கல் அரிசி – 1 கப், வெந்தயம், உளுந்து – தலா 2 டீஸ்பூன், நல்லெண்ணெய் – கால் கப், நாட்டுச் சர்க்கரை – 1 கப்
செய்முறை :- புழுங்கல் அரிசியைக் களைந்து ஊறவைத்து நைஸாக அரைக்கவும். உளுந்தையும் வெந்தயத்தையும் நைஸாக அரைக்கவும். இவை இரண்டையும் சேர்த்து மூன்று கப் தண்ணீரில் நன்கு கரைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் இந்தக் கலவையை ஊற்றிக் கிளறவும், பாதி நல்லெண்ணெயையும் சேர்க்கவும். நன்கு வெந்து ஒட்டாமல் வரும்போது நாட்டுச் சர்க்கரையை சேர்க்கவும். சர்க்கரை கரைந்ததும் மிச்ச நல்லெண்ணையையும் ஊற்றி நன்கு கலக்கி வேகவைத்து இறக்கி நிவேதிக்கவும்
 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...