எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2020

இட்லி பச்சடி.

இட்லி பச்சடி :-


தேவையானவை :- பாசிப்பருப்பு - 1கப்,  கத்திரிக்காய் - 1, உருளைக்கிழங்கு - 1 பெரிய வெங்காயம் - 1, தக்காளி - 1, பச்சை மிளகாய் - 6. மஞ்சள்தூள் - 1 சிட்டிகை, பெருங்காயம் - 1 துண்டு. உப்பு -  1 டீஸ்பூன், புளி - 1 சுளை. தாளிக்க :- எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு, உளுந்தம்பருப்பு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை, கருவேப்பிலை - 1இணுக்கு, கொத்துமல்லித்தழை - சிறிது.

செய்முறை:- பாசிப்பருப்பை அரைகப் நீரில் போட்டு குக்கரில் ஒரு விசில் வைக்கவும். கத்திரிக்காய், உருளைக்கிழங்கு, தக்காளி, பெரிய வெங்காயத்தைப் பொடிப்பொடியாக நறுக்கி வெந்த பருப்போடு சேர்க்கவும். பச்சைமிளகாய்களைக் கீறிப் போட்டு  மஞ்சள்பொடி , பெருங்காயத்துண்டு சேர்த்து இன்னுமொரு முறை குக்கரில் ஒரு விசில் வரும் வரை வைக்கவும். 

ஒரு டம்ளர் தண்ணீரில் உப்பு புளியைக் கரைத்து வைக்கவும். குக்கர் ஆறியதும் திறந்து கரண்டியால் நன்கு மசித்து உப்புப் புளித்தண்ணீரை ஊற்றவும். கொதிக்கவிடவும். இதில் கடுகு, உளுந்து , சீரகத்தைத் தாளித்துக் கருவேப்பிலை சேர்த்துப் பொரிந்ததும் பச்சடியில் சேர்க்கவும். பெருங்காயத்தூளையும் பொடியாக அரிந்த கொத்துமல்லியையும் போட்டு நன்கு கலக்கிவிட்டு சூடான இட்லிகளோடு பரிமாறவும்.  

    

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...