எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 17 பிப்ரவரி, 2025

ஆப்பம்

ஆப்பம்



தேவையானவை :- பச்சரிசி - 1 கப், புழுங்கல் அரிசி ( இட்லி அரிசி) - 1 கப், உளுந்து - 1/2 கப், வெந்தயம் - 2 டீஸ்பூன், உப்பு - 1/2 டீஸ்பூன்

 

செய்முறை :- அரிசிகள்., உளுந்து., வெந்தயத்தை கழுவி 2 மணி நேரம் ஊறவைக்கவும். மைய அரைத்து உப்பு போட்டுக் கரைத்து வைக்கவும். 10 மணி நேரம் புளிக்க விடவும். ஆப்பக்கல்லை எண்ணைத் துணியால் துடைத்து ஒரு கரண்டி மாவை ஊற்றி கல்லை அடுப்பிலிருந்து எடுத்து அப்படியே ஸ்லாத்தவும். அல்லது சுற்றவும். மாவு எல்லாப் பக்கங்களிலும் சரியாக பரவும்.. அடுப்பில் வைத்து மூடி போட்டு ஒரு நிமிடம் வேக விடவும். மூடியை திறந்து ஆப்பத்தை எடுத்து தேங்காய்ப் பால் ஊற்றிப் பரிமாறவும். ஒரு முழுத்தேங்காயைத் திருகி மிக்சியில் அரைத்து 2 கப் தண்ணீர் ஊற்றிப் பாலெடுத்து வடிகட்டி ., 2 டேபிள்ஸ்பூன் சீனியும் ., பொடித்த ஏலக்காயும் போடவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...