எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 30 செப்டம்பர், 2024

16.பச்சரிசி காய்கறிப் பொங்கல்

16.பச்சரிசி காய்கறிப் பொங்கல்


 

தேவையானவை :- பச்சரிசி – 1 கப், பாசிப்பருப்பு – அரை கப், உருளைக்கிழங்கு – 1, பட்டாணி – 1 கப், தக்காளி – 1, பெரியவெங்காயம் – 1 ,சாம்பார் பொடி – அரை டீஸ்பூன், மிளகு – அரை டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், நெய் – 1 டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் – 1, இஞ்சி – 1 இஞ்ச் துண்டு, முந்திரி – 10, உளுந்தம் பருப்பு – அரை டீஸ்பூன். நெய் – 1 டேபிள் ஸ்பூன். கருவேப்பிலை – 1 இணுக்கு. உப்பு – அரை டீஸ்பூன்.

 

செய்முறை :- பச்சரிசி பாசிப்பருப்பைக் கழுவி 4 கப் தண்ணீர் ஊற்றவும். இதில் உருளைக்கிழங்கு பெரிய வெங்காயம் தக்காளியை சின்னத் துண்டுகளாக நறுக்கிச் சேர்க்கவும் பட்டாணியையும் போடவும். பச்சைமிளகாயைக் கீறிப் போடவும். குக்கரில் இரண்டு விசில் வேகவைத்து இறக்கவும். உப்பு சேர்த்து நன்கு மசிக்கவும். நெய்யில் உளுந்தம் பருப்பு, மிளகு சீரகம் , முந்திரி, கருவேப்பிலை வறுத்துப் பொங்கலில் கொட்டிக் கிளறி இரண்டு நிமிடங்கள் மூடி வைத்து உபயோகிக்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...