பொங்கல் பானையும் கொப்பி கொட்டுதலும். :-
திருமணமான பெண்ணுக்குத் தாய் வீட்டில் இருந்து வரும் சீரில் முக்கியமானது பொங்கல் சீர். காரைக்குடியில் எங்கள் ஆயா வீட்டில் இருந்து வருடா வருடம் பொங்கல் சீர் எடுத்து வருவார்கள். அதைப் பொங்கப் பானை கொடுப்பது என்பார்கள். பெண் இருக்கும் வரை பொங்கல் பானை கொடுப்பார்கள்.
பொங்கலுக்கு ஓரிரு நாட்கள் முன்பு சாமி வீட்டில் அம்மா நடுவீட்டுக் கோலமிடுவார்கள். அன்று மாலை பொங்கலுக்குத் தேவையான பச்சரிசி, பாசிப்பருப்பு, வெல்லம், நெய், ஏலக்காய், கிஸ்மிஸு, கத்திரிக்காய், வாழைக்காய், கருணைக்கிழங்கு, பரங்கிக்காய், அவரைக்காய், பலாக்காய், சர்க்கரை வள்ளிக் கிழங்கு, பனங்கிழங்கு, கரும்புக்கட்டு, மஞ்சக் கொத்து , வாழை இலை வெற்றிலை பாக்கு, வாழைப்பழம், தேங்காய் எல்லாம் எடுத்து எங்கள் ஆயா வீட்டு ஐயாவும் மாமாக்களும் வருவார்கள்.
பொதுவாக பொங்கல் பானை விளக்கு வைத்தபின் கொடுப்பதில்லை என்பதால் அது ஒரு மாலைப் பொழுதிலேயே பொங்கல் பானை எடுத்து வருவார்கள். அம்மா சாமி வீட்டில் விளக்கேற்ற நடுவீட்டுக் கோலத்தின் முன்பு கொண்டுவந்த அரிசி, பருப்பு, காய்கறிகளை வைத்து ஐயாவும், மாமாக்களும் வணங்கி வருவார்கள்.
பொங்கல் பானை கொண்டு வந்தவர்களுக்குச் சிறப்பான மாலைப் பலகாரத்தை அம்மா செய்திருப்பார்கள். கந்தரப்பம், வடை, காரட் அல்வா, பாதாம் அல்வா, ரசகுல்லா, குலோப் ஜாமுன், வறுத்த முந்திரிப் பருப்பு, மிக்ஸர் இதில் இனிப்பு ஒன்றும் காரம் ஒன்றும் அத்துடன் இட்லி, தோசை அல்லது மினி ஊத்தப்பம். வெங்காயக் கோஸ்/அவியல்/கோசமல்லி இவற்றோடு இருக்கும்.
பொங்கலுக்கு முதல்நாள் திரும்ப சாமி வீடு மெழுகி அம்மா நடுவீட்டுக் கோலம் போடுவார்கள். பச்சரிசியை ஊறவைத்து அரைத்துக் கரைத்து காட்டன் துணியில் தொட்டு இந்தக் கோலத்தைப் போடுவோம். சாமிவீட்டின் வாசல்படிகளில் கோலமிட்டு சாமிவீட்டுக்கு நேரே வெளிப்பத்தியில் அல்லது கீழ் வாசலில் கிழக்கே சூரியன் உதிக்கும் திசை பார்த்துப் பொங்கலிடக் கோலம் போடுவோம். இதில் செவ்வகக் கோலத்துள் அடுப்பு வைக்க மனைகள் போட்டு தேர்க் கோபுரம் மற்றும் கால்கள் போட்டு இரட்டை வரிசைப் புள்ளிகள் குத்துவோம். முதலில் கோலம் போட்டுப் பழகுபவர்களுக்குப் புள்ளி வைக்கத்தான் கற்றுக் கொடுப்பார்கள்.
திருமணமான பெண்ணுக்குத் தாய் வீட்டில் இருந்து வரும் சீரில் முக்கியமானது பொங்கல் சீர். காரைக்குடியில் எங்கள் ஆயா வீட்டில் இருந்து வருடா வருடம் பொங்கல் சீர் எடுத்து வருவார்கள். அதைப் பொங்கப் பானை கொடுப்பது என்பார்கள். பெண் இருக்கும் வரை பொங்கல் பானை கொடுப்பார்கள்.
பொங்கலுக்கு ஓரிரு நாட்கள் முன்பு சாமி வீட்டில் அம்மா நடுவீட்டுக் கோலமிடுவார்கள். அன்று மாலை பொங்கலுக்குத் தேவையான பச்சரிசி, பாசிப்பருப்பு, வெல்லம், நெய், ஏலக்காய், கிஸ்மிஸு, கத்திரிக்காய், வாழைக்காய், கருணைக்கிழங்கு, பரங்கிக்காய், அவரைக்காய், பலாக்காய், சர்க்கரை வள்ளிக் கிழங்கு, பனங்கிழங்கு, கரும்புக்கட்டு, மஞ்சக் கொத்து , வாழை இலை வெற்றிலை பாக்கு, வாழைப்பழம், தேங்காய் எல்லாம் எடுத்து எங்கள் ஆயா வீட்டு ஐயாவும் மாமாக்களும் வருவார்கள்.
பொதுவாக பொங்கல் பானை விளக்கு வைத்தபின் கொடுப்பதில்லை என்பதால் அது ஒரு மாலைப் பொழுதிலேயே பொங்கல் பானை எடுத்து வருவார்கள். அம்மா சாமி வீட்டில் விளக்கேற்ற நடுவீட்டுக் கோலத்தின் முன்பு கொண்டுவந்த அரிசி, பருப்பு, காய்கறிகளை வைத்து ஐயாவும், மாமாக்களும் வணங்கி வருவார்கள்.
பொங்கல் பானை கொண்டு வந்தவர்களுக்குச் சிறப்பான மாலைப் பலகாரத்தை அம்மா செய்திருப்பார்கள். கந்தரப்பம், வடை, காரட் அல்வா, பாதாம் அல்வா, ரசகுல்லா, குலோப் ஜாமுன், வறுத்த முந்திரிப் பருப்பு, மிக்ஸர் இதில் இனிப்பு ஒன்றும் காரம் ஒன்றும் அத்துடன் இட்லி, தோசை அல்லது மினி ஊத்தப்பம். வெங்காயக் கோஸ்/அவியல்/கோசமல்லி இவற்றோடு இருக்கும்.
பொங்கலுக்கு முதல்நாள் திரும்ப சாமி வீடு மெழுகி அம்மா நடுவீட்டுக் கோலம் போடுவார்கள். பச்சரிசியை ஊறவைத்து அரைத்துக் கரைத்து காட்டன் துணியில் தொட்டு இந்தக் கோலத்தைப் போடுவோம். சாமிவீட்டின் வாசல்படிகளில் கோலமிட்டு சாமிவீட்டுக்கு நேரே வெளிப்பத்தியில் அல்லது கீழ் வாசலில் கிழக்கே சூரியன் உதிக்கும் திசை பார்த்துப் பொங்கலிடக் கோலம் போடுவோம். இதில் செவ்வகக் கோலத்துள் அடுப்பு வைக்க மனைகள் போட்டு தேர்க் கோபுரம் மற்றும் கால்கள் போட்டு இரட்டை வரிசைப் புள்ளிகள் குத்துவோம். முதலில் கோலம் போட்டுப் பழகுபவர்களுக்குப் புள்ளி வைக்கத்தான் கற்றுக் கொடுப்பார்கள்.