எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
அவரைக்காய் இளங்குழம்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அவரைக்காய் இளங்குழம்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 20 ஏப்ரல், 2026

அவரைக்காய் இளங்குழம்பு

அவரைக்காய் இளங்குழம்பு



தேவையானவை:- அவரைக்காய் – 150 கிராம்பெரிய வெங்காயம் – 1தக்காளி – 1பூண்டு- 2 பல்துவரம் பருப்பு – கால் கப்பெருங்காயம் – 1 சிறுதுண்டுபுளி – நெல்லி அளவுஉப்பு – ஒரு டீஸ்பூன்மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்பச்சை மிளகாய் – 2சாம்பார் பொடி – 1 டேபிள் ஸ்பூன்மல்லித்தூள் – அரை  டேபிள் ஸ்பூன்எண்ணெய் – 1 டீஸ்பூன்கடுகு – அரை டீஸ்பூன்சீரகம் – அரை டீஸ்பூன்சோம்பு – கால் டீஸ்பூன்கருவேப்பிலை – 1 இணுக்கு கொழுந்தாககொத்துமல்லி – 1 கைப்பிடி

 

செய்முறை:- துவரம் பருப்பைக் குழைய வேக வைக்கவும். வெங்காயம் தக்காளியைக் கழுவி நீளவாக்கில் நறுக்கவும். அவரைக்காயை நரம்பு எடுத்து இரண்டாக நறுக்கவும். பூண்டைத் தோலுரித்து நைத்து வைக்கவும். பச்சை மிளகாயைக் கழுவி இரண்டாக வகிர்ந்து வைக்கவும். கொத்துமல்லியைச் சுத்தம் செய்து கழுவிப் பொடிப்பொடியாக நறுக்கி வைக்கவும். 8 கப் தண்ணீரில் அவரைக்காய் வெங்காயம் தக்காளி பச்சைமிளகாயை வேகப்போடவும். பெருங்காயம், மஞ்சள்தூள் சேர்க்கவும். முக்கால் பதம் வெந்ததும் சாம்பார் பொடி போட்டு உப்புப் புளியைக் கரைத்து ஊற்றவும். பருப்பை மசித்துச் சேர்த்துக் கொதித்ததும் இறக்குமுன் கொத்துமல்லியும் தட்டிய பூண்டும் சேர்த்து இறக்கவும். எண்ணெயில் கடுகு சீரகம் சோம்பு கருவேப்பிலை தாளித்து உபயோகிக்கவும்.

வெள்ளி, 5 மே, 2023

அவரைக்காய் இளங்குழம்பு

அவரைக்காய் இளங்குழம்பு



தேவையானவை:-அவரைக்காய் – 12, வேகவைத்த துவரம்பருப்பு – அரை கப், பச்சை மிளகாய் – 1, பெரிய வெங்காயம் – 1, தக்காளி – 1, கொத்துமல்லித்தழை – ஒரு கைப்பிடி அளவு. புளி – 3 சுளை, உப்பு – அரை டீஸ்பூன், சாம்பார் பொடி – அரை டீஸ்பூன், மஞ்சள் பொடி – 1சிட்டிகை. தாளிக்க:- எண்ணெய் – 1 டீஸ்பூன், கடுகு, உளுந்து, சீரகம் – தலா அரை டீஸ்பூன். கருவேப்பிலை – 1 இணுக்கு.

செய்முறை:- அவரைக்காயை நார் எடுத்து இரண்டாக நறுக்கவும். பெரிய வெங்காயம் தக்காளியை நீளவாக்கில் அரியவும். பச்சை மிளகாயை இரண்டாக வகிரவும். இவை அனைத்தையும் ஒரு ப்ரஷர் பானில் போட்டு கால் கப்நீரூற்றி ஒரு விசில் வைத்து இறக்கி லேசாக மசித்து விடவும். புளியை இரண்டு கப் நீரில் ஊறவைத்துக் கரைத்து உப்பு சேர்த்து இதில் ஊற்றவும். சாம்பார்பொடி, மஞ்சள் பொடி போட்டுக் கொதிக்க விட்டு இருநிமிடங்கள் கழித்து கொத்துமல்லித்தழை சேர்த்து இறக்கவும். எண்ணெயில் கடுகு, உளுந்து சீரகம் தாளித்துக் கொட்டவும். 

இது காரம் குறைவாக இளசாக இருப்பதால் குழைவான சாதத்தோடு சாப்பிட நன்றாக இருக்கும். 

Related Posts Plugin for WordPress, Blogger...